www.garudabazaar.com

"எதுக்காக மறைக்கணும், நான் Open-ஆ சொல்றேன்".. மயில்சாமி பேசியதை நினைவுகூர்ந்த டெல்லி கணேஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

Delhi Ganesh Opens up about mayilsamy character exclusive

Also Read | "மயில்சாமி திரும்ப வந்தா இதைத்தான் கேட்பேன்".. மனமுடைந்து குறிப்பிட்ட மனோபாலா!!

57 வயதான மயில்சாமி, ஏராளமான திரைப்படங்களில் தோன்றியுள்ள சூழலில் நடிப்பு என்பதை தாண்டி யார் வந்து உதவி கேட்டாலும் தன்னால் ஆன உதவியை செய்யக்கூடிய குணம் படைத்தவர். இதனால் அனைவரிடமே நல்ல பேர் எடுத்துள்ள மயில்சாமியின் இழப்பு, ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமில்லாமல் பல மக்களையும் மீளாத்துறயரில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக தீவிர சிவ பக்தனான மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் பூஜை செய்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்த சமயத்தில் தான் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மயில்சாமி உடலுக்கு திரையுலகினர், அரசியல்  பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

Delhi Ganesh Opens up about mayilsamy character exclusive

தொடர்ந்து அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்ட சூழலில் தற்போது பல பிரபலங்கள் மயில்சாமியுடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும் உருக்கத்துடன் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். அப்படி இருக்கையில் பிரபல நடிகர் டெல்லி கணேஷ், Behindwoods சேனலுக்காக அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் மயில்சாமி குறித்து ஏராளமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

"காலைல குளிச்சிட்டு அப்படியே பூஜை பண்ணலாம்னு போனேன். மயில்சாமி தவறி போய்ட்டார்ன்னு ஒரு போன் வந்தது. அப்படியே எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு, நம்பவே முடியல. நேரடியா போய் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தணும்ன்னு ஆசை. ஆனா, எனக்கு அந்த மாதிரி ஒரு உடம்ப பார்க்க இஷ்டமில்ல. நான் எப்பவும் பார்த்த மயில்சாமி என் முன்னாடி இருக்கணும். நெருங்கி பழகுன ஒருத்தவங்க இந்த மாதிரி நம்மள விட்டு போகும் போது மனசு கஷ்டமா தான இருக்கும்" என உருக்கத்துடன் குறிப்பிட்ட டெல்லி கணேஷ், மற்றவர்களுக்கு உதவும் மயில்சாமியின் குணம் பற்றியும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Delhi Ganesh Opens up about mayilsamy character exclusive

"இப்படி எல்லாம் இருந்தா தான் இறைவன் கூட்டிட்டு போய் விடுவானா என்ன?.. அதான் எனக்கு பயமா இருக்கு. நல்லவனுக்கு காலமில்லன்னு எல்லாரும் சொல்றது இவர் விஷயத்துல உண்மை ஆயிடுச்சா?. அவர் எதையும் மறைக்கவே மாட்டாரு. தொறந்த புத்தகம் அவரு. அவரு வெளிப்படையா பேசுறவரு. யாருக்காக மறைக்கணும், எதற்காக மறைக்கணும். நான் Open ஆ சொல்றேன்யா அப்படின்னு டிவில பேசுவாரு. சில நேரம் டிவில காரசாரமா பேசும் போது நானே போன் பண்ணி சொல்லி இருக்கேன், இப்படி எல்லாம் பேசாதீங்க கொஞ்சம் அன்பா பேசுங்கன்னு, 'அட போங்க சார் உங்ககிட்ட அன்பா பேசுவேன். அவன் வந்து டைப்பா பேசுறான். அவன் கிட்ட அப்படித்தானே நானும் பேசணும்' அப்படின்னு சொல்லுவாரு" என குறிப்பிட்டார்.

Also Read | தனுஷ் மாதிரி ஒரு ஆளு கிடைக்க திரையுலகம் தவம் செஞ்சுருக்கணும்.. வாத்தி -ஐ பாராட்டிய பாரதிராஜா

"எதுக்காக மறைக்கணும், நான் OPEN-ஆ சொல்றேன்".. மயில்சாமி பேசியதை நினைவுகூர்ந்த டெல்லி கணேஷ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Delhi Ganesh Opens up about mayilsamy character exclusive

People looking for online information on Delhi Ganesh, Mayilsamy will find this news story useful.