''துரோகிகள் நண்பர்களாக நடிக்கின்றனர்'' - பாதிக்கப்பட்ட பிக்பாஸ் நடிகை... ஏன் இப்படி சொல்கிறார்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனல் மெசேஜை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் அபிராமியின் உருக்கமான பதிவு | biggboss fame actress abhirami shares a emotional note on her instagram story

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். மேலும் இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நெர்கொண்ட பார்வை படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது பிக்பாஸ் லாஸ்லியா, ஷ்ருஷ்டி டாங்கே, ஆரி அர்ஜுனா நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''சமயங்களில் துரோகிகள் நண்பர்களை போல நடிப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் சொல்கிறேன், என்னை நம்புங்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார். அபிராமியின் இந்த பதிவு யாரை குறிக்கிறது என நெட்டிசன்கள் யோசித்து கொண்டிருக்கின்றனர்.

Entertainment sub editor