Bigg Boss 3: ‘கவின் கொடுத்த சாக்லெட்ட வாங்கினது ஒரு குத்தமா..?’ - Dairy Milk-காக அழுத லொஸ்லியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 23வது நாள் எபிசோடில் சிறுபிள்ளைத்தனமாக சாக்லெட்டிற்கு நடந்த சண்டையும், சமாதானமும் கவனம் ஈர்த்தது.

Bigg Boss Tamil 3 Highlights - Losliya into tears after sakshi makes quarrel with kavin over dairy milk chocolate

பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதுமே ஆட்டம், பாட்டம் என துள்ளலாக சுற்றி வருபவர் லொஸ்லியா. இந்த சீசன் தொடங்கிய 24 மணி நேரத்தில் அவரது ரசிகர்கள் ஆர்மி உருவாக்கி அமர்க்களப்படுத்தினர். மக்கள் மனதில் இடம்பிடித்த லொஸ்லியாவுக்கு அவர்களின் ஆதரவும் அதிகம் எனலாம்.

இந்நிலையில், 23ம் நாள் எபிசோடில், முதல் நாள் இரவு பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் Dairy Milk சாக்லெட் கொடுக்கப்பட்டது. அப்போது கவினை அண்ணா என்று அழைத்ததற்காக அவரை லொஸ்லியா சமாதானம் செய்துக் கொண்டிருக்கையில், கேப்டனான சாக்ஷி சாக்லெட்டை கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் லொஸ்லியாவிற்கு கொடுத்த சாக்லெட்டை கவின் வாங்கிக் கொள்ள கவினுடைய சாக்லெட்டை லொஸ்லியா வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுதவிர சாக்ஷி தனிப்பட்ட முறையில் கவினுக்கு ஒரு சாக்லெட்டை கொடுத்திருக்கிறார். மறுநாள் அந்த சாக்லெட்டை சாப்பிடிவதற்காக லொஸ்லியா அதனை பிரிக்க, சாக்ஷி கவினிடம் சென்று நான் உனக்கு கொடுத்ததை நீ அவளுக்கு கொடுத்தியா என கேட்டு அன்பு சண்டையிட்டார்.

ஒரு சாக்லெட் வாங்கியது குற்றமா என்ற கவலையில் லொஸ்லியா மனமுடைய, எனக்கு நீ கொடுத்த சாக்லெட் தேவையில்லை எனக் கூறி அதனை திரும்பவும் கவினிடம் கொடுத்துவிட்டார். இது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என கவின் கூறியும் லொஸ்லியா கண்டுக்கொள்ளவில்லை. இதனால் வருத்ததில் அழுதுக் கொண்டிருந்த தன் மகளை சேரன் சமாதானம் செய்தார்.