'வேலைக்கு நடுவே கையில் வந்து சிக்கிய அதிர்ஷ்டம்'... 'ஒரே நாளில் மாறிய தொழிலாளியின் வாழ்க்கை!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 07, 2020 01:51 PM

மத்தியபிரதேசத்தில் சுரங்கம் தோண்டிய தொழிலாளி கையில் 7.5 காரட் வைரம் கிடைத்ததால் அவர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

MP Labourer Finds Diamonds Worth Rs 35 Lakh In Mine

மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்த சுபால் என்ற தொழிலாளி சுரங்கத்தை தோண்டியபோது அவருக்கு 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளன. அதை அவர் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்ய, வைரத்தை ஏலம் விட்டு 12 சதவீதம் வரியை பிடித்துக்கொண்டு 88 சதவீத தொகை சுபாலிடம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபால் கண்டெடுத்த வைரத்தின் விலை 30 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவர் ஒரேநாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார். இதே பன்னா மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் மற்றொரு தொழிலாளி 10.69 காரட் வைரத்தை கண்டுபிடித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MP Labourer Finds Diamonds Worth Rs 35 Lakh In Mine | India News.