'கோயிலுக்கு உள்ள வச்சு கல்யாணம்...' 'வெளிய வச்சு தற்கொலை...' - கல்யாணம் முடிச்ச கையோடு எடுத்த விபரீத முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 07, 2020 12:54 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள  ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்குமார். இவரும் செம்பாகுறிச்சி பகுதியை சேர்ந்த கவிதாவும் காட்டுகொட்டாயில் உள்ள கலை கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.

kallakurichi love couple committed suicide after marriage

அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காமல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (06-08-2020) வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஈரியூர் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துள்ளனர். பின்பு கோயிலின் வெளிபுற பகுதியில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் கேள்விபட்ட உடனே விரைந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kallakurichi love couple committed suicide after marriage | Tamil Nadu News.