‘யாசகம் எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை’... ‘சிக்னலில் பொருளும் வாங்கக் கூடாது’... ‘எச்சரிக்கும் நாடு’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 19, 2020 09:05 PM

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police to crack whip on “fake beggars” in Sri lanka

கொரோனா பரவல் உலக நாடுகள் அனைத்தையும் விட்டுவைக்காமல் புரட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா பரவல் நேரத்தில் ட்ராஃபிக்கில் போலியான பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கையின் போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா கூறியதாவது,

‘கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான யாசகர்கள் கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Police to crack whip on “fake beggars” in Sri lanka

போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிக்னல் பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிக்னல் பகுதியில் பொருள் விற்பவர்களிடம் இருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பொருட்கள் வாங்கக் கூடாது.

மீறி வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும், சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Police to crack whip on “fake beggars” in Sri lanka | World News.