'கொரோனாவ இவங்க உருவாக்கி இருக்கலாம்'... 'இப்போ நல்லவன் வேஷம் போடுறாங்க'... குண்டை தூக்கி போட்ட ஈரான்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 23, 2020 12:43 PM

உலகெங்கிலும் கொரோனாவின் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவரின் புதிய  குற்றசாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Iran\'s supreme leader refused US assistance to fight CoronaVirus

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,643 ஆக உயர்ந்து உள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கொரோனாவின் பாதிப்பு இத்தாலியை வாட்டி வதைத்து வரும் நிலையில், ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20,610 பேர் பதிப்படைந்துள்ளார்கள். இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் தெரிவித்த குற்றசாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தான் கொரோனா வைரஸை உருவாக்கினார்கள் என்ற குற்றசாட்டு உள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. நீண்ட கால எதிரியான அமெரிக்கா தற்போது உங்களுக்கு உதவுகிறேன் என நல்லவர்கள் வேஷம் போடுகிறார்கள். உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது?. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை கூறியபோதும் நான் அதை நிராகரித்து விட்டேன்.

அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள் என அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். அவரின் இந்த குற்றசாட்டு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONAVIRUS #CONSPIRACY #AYATOLLAH ALI KHAMENEI #IRAN #AMERICAN