கொரோனா சிகிச்சைக்கு பயன்படும்... 'HYDROXYCHLOROQUINE' (ஹைட்ராக்சிகுளோரோகுயின்) மருந்தை... அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
![india to supply hydroxychloroquine drug to usa mea india to supply hydroxychloroquine drug to usa mea](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/india-to-supply-hydroxychloroquine-drug-to-usa-mea.jpg)
உலக அளவில், கொரோனா வைரசால் அமெரிக்கா தான் அதிக பாதிப்பினை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக மீண்டும் கருத்துக் கூறிய டிரம்ப், நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று மறைமுக மிரட்டல் விடுத்து இருந்தார்
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)