‘வைரஸை விட நாம பலசாலினு யாரும் நினைச்சிடாதீங்க’.. ‘எல்லோரும் இத ஃபாலோ பண்ணுங்க’.. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 07, 2020 10:59 AM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்ட  இளைஞர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Cured COVID19 patient expresses gratitude to healthcare workers

சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த யாஷ் என்ற இளைஞர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ள அவர் மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘நாம் வைரஸை விட பலசாலி என ஒருவரும் நினைத்துவிடக்கூடாது. சமூக இடைவெளியை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கை மதித்து, விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிலும் இடைவிடாது பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.