'அமெரிக்கா மீது விழுந்த மரண இடி'... 'ரிப்போர்டை பார்த்து நொறுங்கி போன மக்கள்'... இப்படி தினம் தினம் செத்து பொழைக்கணுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 18, 2020 11:54 AM

தனது சொந்தங்கள் தங்களது கண்முன்பே செத்து மடியும் சோகம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கோரமாகும். அதுபோன்ற ஒரு துயரத்தை தான் தற்போது அமெரிக்க மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

Coronavirus updates: U.S. hits 700,000 confirmed cases

உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, 22 லட்சத்து 48 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது வரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 523 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

உலக அளவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் பட்டியலில் அமெரிக்கா தற்போது முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே நேற்று வெளியாகியுள்ள இந்த பட்டியல் அமெரிக்க மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என பதற்றத்தில் வாழ்ந்து வருவதாக அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.