'தமிழகத்தின் இன்றைய (30-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா...? - முழு விவரம் உள்ளே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 30, 2020 08:06 PM

தமிழகத்தில் இன்று (30-12-2020) ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn covid 19 updates and statistics as on december 30

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,16,132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,615 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்படைந்த 945 பேரில் 3 பேர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 91 பேருக்கும், செங்கல்பட்டில் 48 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், கடந்த 21-ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 1,060 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,96,353 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,109 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn covid 19 updates and statistics as on december 30 | Tamil Nadu News.