'பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில்’... ‘6 பேருக்கு உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி’... ‘வெளியான தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 29, 2020 10:20 AM

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Six UK returnees tested positive for new Coronavirus strain in India

முதல்நாடாக கடந்த டிசம்பர் 8-ம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், பிரிட்டனில் மரபணு உருமாற்றம் அடைந்து 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் இடையே விமான சேவையை நிறுத்தியுள்ளன.

மேலும் கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

33,000 பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 3 பேர், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர், புனேவை சேர்ந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைனால் அந்த 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக  கண்காணிக்கப்படுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Six UK returnees tested positive for new Coronavirus strain in India | India News.