இல்லங்க...! 'அதெல்லாம் முடியவே முடியாது...' 'எனக்கு என் ஹஸ்பண்ட் வேணும்...' - இளம்பெண் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 01, 2021 09:03 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி பெண் ஒருவர் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvallur girl protest mother-in-law\'s house loving husband

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் ஒன்றாக படித்துவந்த சித்ரா (21) மற்றும் பிரமோத் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலை முன்பு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு, சென்னையில் பதிவு திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்பு இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்தனர். அதன்பின் இரு வீட்டாருக்கும் திருமணம் விஷயம் தெரிய வந்து பிரச்சனை ஏற்படவே, இருவரும் பின்னர் சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.

மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த சித்ரா மற்றும் பிரமோத்தின் திருமண வாழ்க்கையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து பிரமோத் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால் சித்ரா தன் கணவருடன் தான் வாழவேண்டும் என தனது உறவினர்களுடன் வந்து  ஊத்துக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tiruvallur girl protest mother-in-law's house loving husband | Tamil Nadu News.