VIDEO : அசுர வேகத்தில் வந்த 'கார்'... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த 'கொடூரம்'... "முன்னாடி பைக்குல மெதுவா போன ரெண்டு பேரும்"... மனதை 'பதற' வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்..!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Aug 03, 2020 09:44 PM

கோவை தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ஐந்து பேர், தனது நண்பரின் வீடு விஷேசத்திற்காக திருப்பூரை அடுத்த கொடுவாய் என்னும் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.

tiruppur 3 died in horrifying accident cctv makes shocked

இந்நிலையில், நண்பர்கள் வீட்டிற்கு சென்று மீண்டும் திரும்பிய மாணவர்கள் ஐந்து பேரும், காரில் திரும்பியுள்ளனர். பொல்லிகாளிபாளையம் அருகே கார் வேகமாக வந்து கொண்டிருந்த நிலையில், கார் தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருப்பூர் புதூர் பிரிவு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மற்றும் அவரது மனைவி ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த இளைஞர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டனர். இதில், ஒரு இளைஞர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மற்ற இளைஞர்களுக்கு தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோரா விபத்து அப்பகுதியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. 

 

Tags : #TIRUPUR #CCTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tiruppur 3 died in horrifying accident cctv makes shocked | Tamil Nadu News.