"உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல"ன்னு வந்த போன் கால்... "நல்லபடியா வீட்ல இருந்து கெளம்பி போனவ"... 'இப்போ இப்படி ஆயிடுச்சே',,.. தகர்ந்து போன 'பெற்றோர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Aug 09, 2020 07:32 PM

திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர் பூக்கடை நடத்தி வருகிறார். மோகன ப்ரியா என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

thiruvallur parents get shock after when they saw their daughter

இந்நிலையில், இவர்களுக்கு திருமணமான நாள் முதலே முருகனின் குடும்பத்தினர் மோகன ப்ரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில், முருகனுக்கு வேறொரு  பெண்ணுடன் தொடர்பு இருந்ததன் பெயரிலும் இருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக தனது தாய் வீட்டில் வசித்து வந்த மோகன ப்ரியா, சமீபத்தில் தான் மீண்டும் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை மோகன ப்ரியாவின் பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்த முருகன் குடும்பத்தினர், மோகன ப்ரியாவுக்கு உடம்பு சரியில்லை என்றும், தங்கள் விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால், மோகன ப்ரியாவின் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவர்களது மகள் உயிரிழந்து போயுள்ளார். அதே போல, அவரது உடலும் அடக்கம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன மோகன ப்ரியாவின் பெற்றோர்கள், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களது புகாரில், தங்களது மகளின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், முருகனின் குடும்பத்தினர் சேர்ந்து எங்களது மகளை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thiruvallur parents get shock after when they saw their daughter | Tamil Nadu News.