'மர்மமாக காணாமல் போன இளம் பெண்'... 'கிணற்றில் மிதந்த பார்சல்'... 'நாய் பண்ணைக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி'... அவிழாத மர்ம முடிச்சுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 20, 2020 12:23 PM

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்குச் சீனிவாசன் என்பவரோடு திருமணமான நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த வாணியமல்லி கிராமத்தில் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காட்வின் டோமினிக் என்ற காடிபாய் என்பவருடன் பிரியங்கா வசித்து வந்துள்ளார். மேலும் அவர் நடத்தி வந்த நாய் பண்ணையையும் அவர் பராமரித்து வந்தார்.

Thiruvallur : Missing Young Woman Found Dead in Dog Form

இந்த சூழ்நிலையில் தனது தங்கையைக் காணவில்லை என செகந்திராபாத்தில் வசித்து வரும் அவரது அண்ணன் விக்ரம் என்பவர் பாதிரிவேடு போலீசில் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வந்தார்கள். இதையடுத்து வாணியமல்லி கிராமத்தில் உள்ள நாய் பண்ணைக்குச் சென்ற போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது இளம்பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்டு நாய் பண்ணையில் புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையடுத்து தாசில்தார் கதிர்வேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நாய் பண்ணையில் புதைக்கப்பட்ட பிரியங்காவின் உடல் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையிலிருந்த அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் நாய் பண்ணைக்கு அருகில் உள்ள கிணற்றில் 2 கருப்பு பைகள் மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தார்கள். அதைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பவுடர் போன்ற ஒரு பொருள் இருப்பது தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் போதைப் பொருள் தானா? அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளா? என காஞ்சீபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேரில் வந்து அந்த பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வுக்கு பிறகே மர்மப் பொருளின் தன்மை குறித்துத் தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனிடையே விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள போலீசார், கிணற்றில் கிடந்த மர்மப் பொருட்களுக்கும், இளம் பெண் பிரியங்கா மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே நாய் பண்ணையின் உரிமையாளர் காட்வின் டோமினிக் எங்குச் சென்றார்?. அவரைத் தவிர இளம்பெண் பிரியங்காவுடன் தொடர்பிலிருந்த மேலும் 3 நபர்கள் யார்? போன்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thiruvallur : Missing Young Woman Found Dead in Dog Form | Tamil Nadu News.