வீட்டை பாதுகாக்க கேட் போடலாம்..! ஆனா அந்த கேட்-டுக்கே பாதுகாப்பு இல்லையே..!- வேளச்சேரியில் நடந்த துணிகர சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Jan 03, 2022 06:00 PM

வீட்டைப் பாதுகாக்க போடப்பட்ட இரும்பு கேட்-டுக்கே தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. வழக்கறிஞர் ஒருவரின் வீட்டு வாசல் கேட்-ஐ திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் சென்னை வேளச்சேரியில் நடந்தேறி உள்ளது.

thief stole the front iron gate of a house at velachery, chennai

சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டை திருடிச் சென்றுள்ளனர். வீட்டின் பாதுகாப்புக்காக வாயிலில் இரும்பு கேட் அமைப்பது நம்ம ஊரில் வழக்கம். ஆனால், அந்த இரும்பு கேட்-ஐ திருடர்கள் இருவர் திருடிச் சென்றுள்ளனர். இத்தனைக்கும் அந்த வழக்கறிஞர் வீட்டின் வாயிலில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

திடீரென வீட்டு வாசலில் இருந்த கேட் மாயமாகிவிட்டதால் சிசிடிவி கேமிராவை சோதித்துப் பார்த்துள்ளார் அந்த வழக்கறிஞர். அப்போது பழைய பேப்பர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எடுக்க வருவோர்கள் போன்று 2 பேர் அந்த வழக்கறிஞரின் வீட்டு வாசலில் வந்து நிற்கின்றனர். ஒருவர் ட்ரை சைக்கிளை இழுத்துக் கொண்டு வர மற்றொரு கோனி பையுடன் இரும்பு கேட்டை நோக்கி வருகின்றனர்.

வீட்டு வாசலில் சிசிடிவி கேமிரா இருப்பதை அவர்கள் இருவரும் பார்க்கின்றனர். ஆனாலும், வீட்டில் யாரும் இல்லாததைப் பார்த்து இரும்பு கேட்டை திருடிச் சென்றுவிட்டனர். முக்கியமான நகர்ப்புறத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது அந்தப் பகுதியினரை பதற்றம் அடையச் செய்துள்ளது.

Tags : #ROBBERY #VELACHERY #THEFT AT VELACHERY #GATE OF A HOUSE #வேளச்சேரி #வீட்டு பாதுகாப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thief stole the front iron gate of a house at velachery, chennai | Tamil Nadu News.