ரோட்டோரம் கிடந்த சூட்கேஸ்.. காலையில் வாக்கிங் போக வந்தவர்கள் கண்ட நடுங்க வைக்கும் காட்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 07, 2022 12:20 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த சூட்கேசில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

shocking public saw a suitcase lying on roadside in Tirupur

வாட்டர் டேங்கில் இருந்து வந்த அலறல் சத்தம்.. என்ன லவ் பண்ணிட்டு.. கல்யாணம் மட்டும் அவன் கூடவா? கதறி துடித்த அம்மா

நடைபயிற்சியின் போது பொதுமக்கள் கண்ட சூட்கேஸ்:

திருப்பூரில் இருந்து மதுரை. தேனீ செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலையில் புதுநகர் என்ற பகுதி உள்ளது.அந்த பகுதியை அடுத்த ஒத்தகடை என்னும் இடத்தில் இந்த சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சூட்கேஸ் ஒன்று சாலையோரம் இருக்கும் சாக்கடையில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட பலத்த சந்தேகம்:

மேலும் அந்த சூட்கேசின் மேல்பக்கம் ரத்தக் கறைகள் இருந்ததினால் பொதுமக்களுக்கு பலத்த சந்தேகம் வந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்கள் சந்தேகித்தது போலவே சூட்கேசை திறந்து பார்த்தபோது 25 வயது பெண் சடலம் இருந்துள்ளது.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடமே பொதுமக்கள் சூழ்ந்து பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையர், துணை ஆணையர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவேலம் செடி இருக்கும் புதர் பகுதி:

shocking public saw a suitcase lying on roadside in Tirupur

மேலும் அந்த சாலையோரம் கருவேலம் செடி இருக்கும் புதர் காணப்படுவதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் நடந்துள்ளதா? அல்லது வேறு எங்கேனும் நடந்து இங்கே வந்து போட்டுக் கொண்டு சென்றார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்டவைகள் மூலம் கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

இந்த பெண் யார்?

மேலும், தற்போது வரை இந்த பெண் யார் எங்கே உள்ளவர் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை, அந்த சடலம் ஒரு பெண் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளில் இருந்த மிகப்பெரிய ஓட்டை.. எப்படி இது உங்க கண்ணுல மாட்டுச்சு? கண்டுபிடித்த இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்

Tags : #PUBLIC #SUITCASE #ROADSIDE #TIRUPUR #சூட்கேஸ் #திருப்பூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shocking public saw a suitcase lying on roadside in Tirupur | Tamil Nadu News.