வாட்டர் டேங்கில் இருந்து வந்த அலறல் சத்தம்.. ஐயோ என் பொண்ணுக்கு ஆச்சு? பதறி ஓடிய அம்மா.. நடுங்க வைக்கும் பயங்கரம்
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் ஒரு இளம் பெண் கிளார்க்கை நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் கொலை செய்த கொலையாளியை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
![mp boyfriend killed the young woman Clark in water tank mp boyfriend killed the young woman Clark in water tank](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/photo-mp-boyfriend-killed-the-young-woman-clark-in-water-tank.jpg)
பெண்கள் மீது தொடரும் அத்துமீறல்:
பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்கள் மேல் உரிமை எடுத்துக் கொள்ளும் போக்கு தவறானது என்பதனை எப்போது உணருமோ அப்போது தான் இந்த மாதிரியான குற்ற செயல்கள் இந்திய சமூகத்தில் குறையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. பெண்களை வலுக்கட்டாயமாக காதிலிக்க வைப்பது, காதலிக்கவில்லை என்றால் ஆசிட் ஊத்துவது, மிரட்டுவது, கொலை செய்யவது என குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருவது வேதனைக்குரியது. அப்படி ஒரு சம்ப்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
திருமணம் நடத்த ஏற்பாடு:
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் உள்ள கந்த்வா முனிசிபல் கார்ப்பரேஷனில் ராஜ்னி மசாரே (27 வயது), என்ற பெண் கிளார்க்காக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு அவரின் உறவினர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து ,அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞரோடு திருமணம் பேசி முடித்துள்ளனர். அதற்கான முன்னேற்பாடாக நிச்சயதார்த்தம் நடத்த இருந்தனர்.
உச்சக்கட்ட கோவம்:
இந்த நிலையில் அந்த பெண் அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணை அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மற்றொரு மணமகனுடன் திருமணம் செய்ய முடிவெடுத்ததை கேள்விப்பட்ட அவர், அந்த பெண் மீது அதீத கோபத்தில் இருந்துள்ளார். அதன் காரணமாக அந்த பெண்னின் நிச்சயதார்தத்துக்கு சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் அவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த பெண்ணை அவர் வாட்டர் டேங்கில் வைத்து தாக்கி அவரை ஆயுதங்களால கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணை தேடி வந்த அவரின் அம்மா, மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)