"தனிமையில் செல்லும் ஜோடிகள் தான் இலக்கு".. பெண்களை ரகசியமா கண்காணித்து வந்த நபர்... திடுக்கிடும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 06, 2023 10:48 AM

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடாவிடம் நேரடியாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Salem man extort money by target young woman police enquiry

Also Read | டாஸ்மாக்கில் பரபரப்பு! சக டேபிள் மேட் பைக்கை திருடிய இளைஞர்.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உதவி கோரிய நபர்!!

அதில் தனது ஆண் நண்பருடன் பைக்கில் சென்றதை மர்ம நபர் ஒருவர் படம் பிடித்து வைத்துக் கொண்டு தன்னை தனியாக சந்தித்து மிரட்டி பணம் கேட்பதாகவும், தனிமையில் வர வற்புறுத்தி வருவதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது போலவே, ஓமலூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் தனது ஆண் நண்பருடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காட்டி அதனை வைத்து மிரட்டி, தங்க நகையை பறித்து சென்றதாக புகார் கொடுத்திருந்தார்.

ஏறக்குறைய ஒரே போல சம்பவம் குறித்து இரண்டு இளம்பெண்கள் புகார் கொடுத்திருந்தால், சம்மந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க தீவிர விசாரணையிலும் போலீசார் இறங்கி உள்ளனர். அப்போது நடந்த தேடுதலில், இளம் பெண்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர், சேலம், வீராணம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சர்க்கரை வியாபாரி ராஜா என்கிற சரவணன் என்பது தெரிய வந்துள்ளது.

அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது இன்னும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. சர்க்கரை வியாபாரியான சரவணன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் செல்லும் இளம் ஜோடிகளை நோட்டமிட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், அது மட்டுமில்லாமல் ரகசியமாக அவர்களை கண்காணித்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அதில் இருக்கும் இளம்பெண்களை பின் தொடர்ந்து அவர்கள் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி மிரட்டியதுடன் பணம் வாங்கியும் சரவணன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட வேறு பெண்கள் உள்ளார்களா என்பதையும் அப்படி இருந்தால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் பெண்களை குறி வைத்து நபர் ஈடுபட்டு வந்த மோசடி வேலை, சேலம் பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "இப்படியா லவ் Propose பண்றது?".. இளைஞரின் செயலால் அதிர்ந்த மைதானம்.. கடைசியில் அவரே வெச்ச ட்விஸ்ட்!!

Tags : #SALEM #MAN #MONEY #YOUNG WOMAN #POLICE ENQUIRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Salem man extort money by target young woman police enquiry | Tamil Nadu News.