'தாயாரை' பறிகொடுத்த 'தமிழக' முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய 'மு.க.ஸ்டாலின்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 19, 2020 10:23 AM

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையடுத்து, அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

MK Stalin meets TN CM Edappadi palaniswami after CM lost his mother

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93)  முதுகு வலிக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, அதிகாலை 1 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்த தகவல் அறிந்ததும் சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தாயாரின் உடலை தகனம் செய்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் அவருக்கு போனில் ஏற்கனவே ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை தந்தனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MK Stalin meets TN CM Edappadi palaniswami after CM lost his mother | Tamil Nadu News.