'கொரோனா'விலிருந்து பூரணமாக குணமடைந்துவிட்டார்... ஆனால்... - தமிழக அமைச்சரின் உடல்நிலை குறித்து 'மருத்துவமனை' வெளியிட்ட 'அறிக்கை'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Jul 20, 2020 05:56 PM

தமிழகத்தில் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் சிலர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

minister kp anbazhagan corona miot hospital press release

அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை காரணமாக, அவர் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டார். இருப்பினும், அவர் முன்பை போல சகஜ நிலைக்கு திரும்பும் வரை மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார்.

தற்போது அமைச்சர் கே.பி அன்பழகன் முழுவதுமாக குணமடைந்து விட்ட நிலையில், இன்று வீடு திரும்புகிறார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Minister kp anbazhagan corona miot hospital press release | Tamil Nadu News.