நைசா உள்ளே நுழைந்து பேங்க் கேசியரின் ‘பையை’ திருடிய மர்ம ஆசாமி.. திறந்து பார்த்து கண்டிப்பா ‘ஷாக்’ ஆகியிருப்பாரு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 23, 2021 08:00 AM

வங்கியில் பையை திருடிச்சென்ற நபருக்கு திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

Man steal lunch bag instead of money bag in bank

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் எஸ்பிஐ வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டபடி உள்ளே வந்துள்ளார். அப்போது வங்கி காசாளர் அறை திறந்திருப்பதும் பார்த்ததும் சட்டென உள்ளே சென்றுள்ளார்.

Man steal lunch bag instead of money bag in bank

அங்கு ஒரு பை இருப்பதை பார்த்த அவர், உடனே எடுத்து தான் கொண்டுவந்த பைக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் அங்கு காசாளர் வந்த நிலையில், சுதாரித்துக் கொண்ட இந்த நபர் தெரியாமல் உள்ளே வந்து விட்டதுபோல நடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

Man steal lunch bag instead of money bag in bank

இதனை அடுத்து மதிய உணவிற்காக காசாளர் தனது பையை தேடியுள்ளார். ஆனால் பை காணததால், சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்துள்ளனர். அப்போது அந்த நபர் பணப்பை என நினைத்து உணவு பையை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. ஆனாலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #BANK #THEFT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man steal lunch bag instead of money bag in bank | Tamil Nadu News.