தமிழகத்தில் ‘மறுபடியும்’ முழு ஊரடங்கா?.. முதல்வர் ‘அதிரடி’ பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 12, 2020 11:52 AM

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

Lockdown again in TamilNadu, CM Edappadi Palanisamy explained

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே மீண்டும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா என்று விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் டெல்சா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். அதில்,‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் வதந்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lockdown again in TamilNadu, CM Edappadi Palanisamy explained | Tamil Nadu News.