பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்! - "நீங்க எல்லாம் இருக்கும்வரை அப்பா இருப்பார்!" - எஸ்பிபி சரண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 25, 2020 01:24 PM

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று (செப் 25) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். 

legendary Indian Singer SPB is No More Chennai MGM Hospital

இந்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

எஸ்பிபியின் மகன் சரணும் செய்தியாளர்களிடையே இதனை உறுதிப்படுத்தியதுடன், “எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும்வரை, நீங்க எல்லாரும் இருக்கும்வரை அப்பா இருப்பார்” என்று பேசினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி, நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு முன்பாக கடைசியாக இயக்கி இசையமைத்து பாடிய பாடல் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் மாரடைப்பால் காலமானார் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Legendary Indian Singer SPB is No More Chennai MGM Hospital | Tamil Nadu News.