KALLAKURICHI: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்.. இன்று நடைபெறும் நல்லடக்கம்.. பரபரப்பில் கள்ளக்குறிச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jul 21, 2022 01:47 PM

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் இன்று மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Kallakurichi student parents agree to have body

Also Read | "3 வருஷமா தேடுறோம்.. கிடைக்கல"..அமெரிக்காவில் மர்மமான முறையில் காணாமல்போன இந்திய பெண்.. பொதுமக்கள் கிட்ட உதவி கேட்கும் காவல்துறை..!

அதிர்ச்சி

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி மரணமடைந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் இதேபோல மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி போராட்டத்தில் குதித்தனர் மக்கள். இதில், பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் கள்ளக்குறிச்சியில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Kallakurichi student parents agree to have body

வழக்கு

இந்நிலையில், மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், தங்களது தரப்பு மருத்துவரை உடற்கூராய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மாணவியின் தந்தை. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் மாணவி தரப்பு மருத்துவரை நியமிக்க மறுத்துவிட்டனர் நீதிபதிகள்.

இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் மாணவியின் தந்தை. அங்கேயும் மறு உடற்கூறாய்வுக்கு மட்டுமே நீதிபதிகள் ஒப்புதல் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதியான பி.ஆர்.ஹவாய் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மறு உடற்கூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற மாணவியின் தந்தை அளித்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Kallakurichi student parents agree to have body

சம்மதம்

இதனை தொடர்ந்து, மனைவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இன்று மதியம் 2 மணியளவில் மாணவியின் உடல் பெறப்பட்டு சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளும் அங்கே முகாமிட்டுள்ளனர்.

Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இறுதிச் சுற்றில் இந்தியரான ரிஷி சுனக்.. அடுத்தது என்ன?

Tags : #KALLAKURICHI #SRIMATHI DEATH CASE #SRIMATHI DEATH NEWS #கள்ளக்குறிச்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kallakurichi student parents agree to have body | Tamil Nadu News.