‘தொண்டையில்’ சிக்கிக்கொண்ட ‘சிக்கன் துண்டு’!.. கோவையில் ‘4 வயது சிறுவன்’ உயிரிழந்த ‘சோகம்’.. எப்படி நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 01, 2020 08:58 PM

கோவையில் 4 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கன் சிக்கியதால் அவர் உயிரிழந்தார்.

chicken got stuck in throat minor boy dead coimbatore

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ், பிங்கி தம்பதியரின் மகன் 4 வயதான லோகேஷ். நேற்றைய தினம் இவர்களின் வீட்டில் சிக்கன் எடுத்து சமைத்துள்ளனர்.

நேற்றிரவு சிக்கன் சாப்பிட்ட லோகேஷ்க்கு சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிறுவனது பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, அவர்அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

பின்னர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும், தொண்டையில் சிக்கன் துண்டு சிக்கியதால் சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் முதற்கட்டமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் லோகேஷின் தாயார் பிங்கி தற்போது தன்னுடைய இரண்டாவது கணவருடன் வசித்து வருவதும், லோகேஷ் பிங்கியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்பதும் தெரியவந்ததை அடுத்து போலீஸார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chicken got stuck in throat minor boy dead coimbatore | Tamil Nadu News.