கணவர் இறந்துட்டாருன்னு போலீசுக்கு போன் செஞ்ச மனைவி.. எல்லாம் முடிஞ்ச அப்பறம் போனை செக் பண்ண போலீசுக்கு வந்த டவுட்.. வெளிவந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jul 08, 2022 08:45 PM

சென்னையில் மனைவியே கணவனை கொன்றுவிட்டு நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Chennai police arrested woman for attacking her husband

சென்னையின் வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார். 50 வயதான இவர் எலெக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகறாரில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி தனது கணவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில் மரணம் அடைந்துவிட்டதாக வளசரவாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார் குமாரின் மனைவி.

சந்தேகம்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினர் காவல்துறை அதிகாரிகள். இந்நிலையில், குமாரின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக அந்த பெண்மணி பதில் சொல்லவே, சந்தேகம் அடைந்த போலீசார் துருத்துருவி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்திருக்கிறது.

அதிர்ச்சி

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்ததால் கணவரை கொலை செய்ததாக அந்த பெண்மணி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கின்றனர்.

விசாரணையில், அந்த பெண்மணியின் மொபைல் போனை காவல்துறையினர் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்போது வேறு ஒருவருடன் அந்த பெண் தொடர்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னையில் தனது கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Tags : #HUSBAND #WIFE #POLICE #சென்னை #கணவன் #மனைவி #போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai police arrested woman for attacking her husband | Tamil Nadu News.