“சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 22, 2020 10:59 AM

திருப்பூர், உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த 2015-ஆம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

Chennai High court verdict Udumalai Sankar murder உடுமலை சங்கர் வழக்கு

அதன் பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி, தன் மனைவியுடன் வெளியில் சென்ற சங்கர், பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இவ்வழக்கில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், அதே சமயம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

இந்நிலையில், உடுமலைப் பேட்டையில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், இவ்வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai High court verdict Udumalai Sankar murder உடுமலை சங்கர் வழக்கு | Tamil Nadu News.