WATCH VIDEO: திடீரென 'காதலை' சொல்லிய ரசிகை... 'திகைத்து'ப்போன வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 25, 2019 05:07 PM

மைதானத்தில் ரசிகை திடீரென காதலை சொல்லியதால்,இளம்வீரர் ரிஷப் பண்ட் திகைத்து நிற்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

Cricket Player Rishap Pant Blushes While a fan Proposed Him

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் விளையாடும் முன் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.ரிஷப் பண்ட்டும் இந்த பயிற்சியில் ஈடுபட்டார்.

 

பயிற்சிக்கு மத்தியில் ரசிகர்களுக்கு அவர் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். அப்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய ரசிகை திடீரென ஐ லவ் யூ என சொல்ல, பதிலுக்கு எதுவும் சொல்ல முடியாமல் ரிஷப் திகைத்து நிற்கிறார்.இந்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.