'வாய் பேச முடியாததால்'... '3 நாட்கள் கழித்தே தாய்க்கு தெரிந்த பரிதாபம்'... 'கடத்திச் சென்று 5 பேர் அடுத்தடுத்து செய்த கொடூரம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 10, 2020 06:57 PM

ராஜஸ்தானில் வாய் பேச முடியாத, காது கேளாத 17 வயது சிறுமியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Rajasthan 17 YO Specially Abled Girl Abducted Gangraped By 5 Men

ராஜஸ்தானை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 17 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் அவருடைய வீட்டருகே உள்ள கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடுத்தடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து, மாலை 5 மணியளவில் அந்த சிறுமியின் ஊரிலேயே கொண்டுவந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகே அந்த சிறுமியின் தாய்க்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது. சிறுமியால் வாய் பேச முடியாத நிலையில், அவருடைய உடல் உபாதைகளாலேயே இதுபற்றி தாய்க்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க, அந்த கும்பலை சேர்ந்த 5 பேர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அவருக்கு அதிகளவு காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajasthan 17 YO Specially Abled Girl Abducted Gangraped By 5 Men | India News.