VIDEO: திடீரென எங்கிருந்தோ வந்த புறாக்களால்... பயணிகள் அதிர்ச்சி!... பதறிப்போன விமான நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 01, 2020 08:09 AM

விமானத்துக்குள் திடீரென புறாக்கள் பறந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

passengers shocked on seeing pigeons inside flight in gujarat

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமானநிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு ‘கோ-ஏர்’ விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்த சமயத்தில் திடீரென விமானத்துக்குள் 2 புறாக்கள் அங்கும், இங்கும் வட்டமிட்டபடி பறந்தன. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், சில பயணிகள் உற்சாகத்துடன் புறாக்கள் பறந்ததை தங்கள் செல்போனில் படம்பிடித்தனர். சில பயணிகள் அவற்றை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் புறாக்களை பிடிக்க முடியவில்லை. இதைத் தொடந்து, விமான நிறுவன ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் புறாக்களை பிடித்து விமானத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் விமானத்திற்குள் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமானத்தில் புறாக்கள் பறந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #FLIGHT #PIGEON