முதலிரவு முடிந்ததும் மாயமான புதுமாப்பிள்ளை.. ‘செல்போனும் சுவிட்ச் ஆப்’.. கடைசியில் மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 02, 2022 02:15 PM

முதலிரவு முடிந்ததும் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala groom flees after spending first night with bride

மணமகள் வீட்டில் திருமணம்

கேரள மாநிலம் அடூர் அடுத்த காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீத் (வயது 30). இவருக்கும் பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் மணமகள் வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி நடந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

முதலிரவு

திருமணம் முடிந்து மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் மணமகளின் வீட்டில் விருந்து நடந்தது. அன்று இரவு அவர்களுக்கான முதலிரவு சடங்கும் மணமகள் வீட்டிலேயே நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் முதலிரவு முடிந்து மறுநாள் அதிகாலை 3 மணியளவில் மணமகன் திடீரென வீட்டில் இருந்து வெளியே கிளம்பியுள்ளார்.

Kerala groom flees after spending first night with bride

அதிகாலை திடீரென வெளியே கிளம்பிய மணமகன்

இதனைக் கவனித்த மணமகள், ‘இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்?’ என கேட்டுள்ளார். அப்போது நெருங்கிய நண்பன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளதாகவும், அதனால் சீக்கிரம் செல்ல வேண்டியுள்ளதாகும் கூறியுள்ளார். இதை நம்பிய மணப்பெண்ணும் பெற்றோரிடம் கூறி அவரை வெளியே செல்ல அனுமதித்துள்ளார்.

செல்போன் சுவிட்ச் ஆப்

ஆனால் வீட்டை விட்டு சென்ற மணமகன், அன்று முழுவதும் வீட்டுக்கு திரும்பவில்லை. மணமகளிடமும் பேசவில்லை. அதனால் பெண்ணின் உறவினர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அசாருதீன் ரஷீத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

Kerala groom flees after spending first night with bride

நகை, பணம் மாயம்

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள், உடனே முதலிரவு அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மணமகள் அணிந்திருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.75 லட்சம் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக அடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் மனைவி வீட்டில் சிக்கிய மணமகன்

அப்போது மாயமான அசாருதீன் ரஷீத், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது முதல் மனைவி ஆலப்புழாவை அடுத்த சேப்பாடு பகுதியில் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. உடனே அங்கு சென்று அசாருதீன் ரஷீதை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலிரவு முடிந்ததும் மணமகன் நகைகளுடன் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நேரத்துலதான் ‘RCB’ என்ன எடுத்தாங்க.. கோலியை முதலில் ‘குறி’ வைத்த டீம் எது தெரியுமா..? அவரே சொன்ன சீக்ரெட்..!

Tags : #KERALA GROOM FLEES #SPENDING FIRST NIGHT WITH BRIDE #முதலிரவு #புதுமாப்பிள்ளை #மணப்பெண் #திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala groom flees after spending first night with bride | India News.