நண்பன் மனைவியை கல்யாணம் செய்த நபர்.. ‘இதுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும்’.. குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 08, 2022 08:36 PM

கொரோனாவால் இறந்த நண்பரின் மனைவியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man marries deceased friend wife in Karnataka

பெங்களூரு

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்குமார் (வயது 41). இவருக்கும் ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுக்கும் (வயது 30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. சேத்தன் குமார் பெங்களூருவில் உள்ள  தனியார் ம்ருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கொரோனா

இந்த சூழலில் கொரோனா 2-வது அலையின் போது சேத்தன்குமார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அம்பிகா மிகவும் மனம் உடைத்து காணப்பட்டார். திடீரென அம்பிகா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த சேத்தன்குமாரின் நண்பர் லோகேஷ், உடனே அம்பிகாவை காப்பாற்றினார்.

மறுமணம்

இதனைத் தொடர்ந்து சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து இதுகுறித்து தங்களது வீட்டினரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Man marries deceased friend wife in Karnataka

பாராட்டு

இந்த நிலையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி அம்பிகாவுக்கும், லோகேஸுக்கும் பெங்களூருவில் திருமணம் நடந்தது. கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணம் செய்த லோகேஸின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags : #CORONA #MARRIAGE #FRIENDWIFE #KARNATAKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man marries deceased friend wife in Karnataka | India News.