ஐபிஎல் ஏலத்தில் CSK வீரரை குறி வைக்கும் RCB?.. அதுக்காக இப்பவே பணம் ஒதுக்கிட்டாங்களாமே.. கசிந்த தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 08, 2022 07:09 PM

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RCB want to sign CSK player in IPL auction 2022: Report

அதை பத்தி இப்போ நினைச்சா கூட வலிக்குது.. கே.எல்.ராகுல் அடிக்கடி அந்த போட்டோவை அனுப்புவாரு.. கோலி உருக்கம்..!

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னாதாக வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB) விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதனால் மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

அடுத்த ஆர்சிபி கேப்டன்

பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால், அடுத்த கேப்டனாக யார் வர உள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆர்சிபி அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியில் விளையாடிய அம்பட்டி ராயுடுவை பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.

RCB want to sign CSK player in IPL auction 2022: Report

வெஸ்ட் இண்டீஸ் வீரர்

இதுகுறித்து பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்த பெங்களூரு அணியின் நெருங்கிய வட்டாரங்கள், ‘பென் ஸ்டோக்ஸ் இல்லை. ஹர்திக் பாண்ட்யா மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளனர். மிட்செல் மார்ஷ் தனது காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இப்போதைக்கு ஜேசன் ஹோல்டர்தான் அடுத்த சாய்ஸ். ஹோல்டரின் சாதனையைப் பார்த்தால் அற்புதமாக உள்ளது. மற்ற சில அணிகளும் ஹோல்டருக்காகக் போட்டிபோடுவதால், என்ன விலையானாலும் பரவாயில்லை என ஹோல்டரை பிடித்துப் போட ஆர்சிபி விரும்பும்’ என தெரிவித்துள்ளனர்.

சிஎஸ்கே வீரர்

தற்போது ஆர்சிபி அணியின் கையில் ரூ.57 கோடி உள்ளது. அதனால் அம்பட்டி ராயுடு மற்றும் ரியான் பராக் ஆகியோரையும் பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக ஜேசன் ஹோல்டருக்கு ரூ.12 கோடியும், அம்பட்டி ராயுடுவுக்கு ரூ.8 கோடியும், ரியான் பராக்கிற்கு ரூ.7 கோடியும் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

RCB want to sign CSK player in IPL auction 2022: Report

அம்பட்டி ராயுடு

அம்பட்டி ராயுடுவைப் பொறுத்த வரையில், கடந்த 4 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு மிகவும் மகத்தானது. அவர் இந்த ஏலத்தில் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக பட்டியலிடப்பட்டுள்ளார். அதனால் அவர் பெரிய விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோதுமை மாவில் அச்சு.. கீழ் வீட்டுக்காரருக்கு ‘ஷாக்’ கொடுத்த சென்னை ஏசி மெக்கானிக்..!

Tags : #IPL2022 #CSK #RCB #CSK PLAYER #IPL AUCTION 2022 #ஐபிஎல் #ஆர்சிபி #வெஸ்ட் இண்டீஸ் #சிஎஸ்கே வீரர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. RCB want to sign CSK player in IPL auction 2022: Report | Sports News.