'அப்பாவும் மகனும் சேர்ந்து...' 'ஒருபக்க காதை கரகரவென அறுத்த குரூரம்...' அப்படி என்ன சண்டை...? - உச்சகட்ட வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 16, 2020 03:23 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரின் ஒரு பக்க காதை அறுத்த அப்பா மகனை போலீசார் கைது செய்தனர்.

Maharashtra father and son arrest for cutting off ear

மகாரஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரபாகர் மத்ரே என்பவரும் ஜகதீஷ் பாட்டிலும் அண்டை வீட்டாராக வாழ்ந்து வந்தனர். கடந்த பல மாதங்களாகவே இரு வீட்டாருக்கும்   இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர்களின் வீட்டின் அருகே இரண்டு பேரும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே போக கைகலப்பாக மாறியுள்ளது. கடும் ஆத்திரமடைந்த பிரபாகர் மத்ரே தனது மகனுடன் சேர்ந்து அண்டை வீட்டுக்காரரான ஜகதீஷ் பாட்டிலை இறைச்சி வெட்டும் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது ஜகதீஷ் பாட்டிலின் இடது காது துண்டாக வெட்டியுள்ளார். மேலும் சண்டையை தடுக்க சென்ற ஜகதீஷ் சகோதரரையும் தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக ஜகதீஷ் பாட்டிலின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபாகர் மத்ரே மற்றும் அவர் மகன் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் பால்கர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதுகள் வெட்டப்பட்ட நிலையில் இருந்த ஜகதீஷ் பாட்டில் மற்றும் அவரின் சகோதரரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் . மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குடியிருப்பு பகுதி மக்களையும், அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maharashtra father and son arrest for cutting off ear | India News.