ராத்திரி நேரத்துல... 'புருஷன' அடிச்சி போட்டுட்டு... அவரு 'கண்ணு' முன்னாடியே... நள்ளிரவில் 'பைக்'கில் வந்த நபர்களால்.... 'மனைவி'க்கு நேர்ந்த 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Aug 04, 2020 09:06 PM

ஆந்திர மாநிலம், ஜாமின் நகர் தாண்டா என்னும் மலைவாழ் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் நாயக். ஐவரும் இவரது மனைவியும், அங்குள்ள பங்களா ஒன்றில் செக்யூரிட்டி வேலை செய்து வருகின்றனர்.

Kurnool tribal women gangraped in front of husband

இதனால் இவர்களுக்கு எப்போதும் நைட் ட்யூட்டி தான். இந்நிலையில், வழக்கம் போல இருவரும் இரவு பணியில் இருந்துள்ளனர். அப்போது இரவு சுமார் 12 மணியளவில், அங்கு 2 பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது. பைக்கில் வந்த நான்கு பேரும், நாகேஷின் கைகளை கட்டி போட்டு விட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.

தொடர்ந்து, நாகேஷ் கண் முன்னே அவரது மனைவியை நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நாகேஷ் கைகள் கட்டப்பட்டிருந்ததால் அவரால் தடுக்க முடியவில்லை. இறுதியில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக, அந்த தம்பதி போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

ஆனால் தொடக்கத்தில் போலீசார் எந்த கவனம் கொள்ளாத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக, இந்த கொடூர சம்பவம் குறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு சென்ற நிலையில், அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

படுகாயமடைந்த நாகேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : #CRIME #TRIBAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kurnool tribal women gangraped in front of husband | India News.