5 வயசு 'சிறுமி'ய தனியா கூட்டிட்டு போய்... பாலியல் வன்கொடுமை செஞ்சு... கடைசியில் கல்லாலேயே... 'சிறுவன்' செஞ்ச பதற வைக்கும் 'கொடூரம்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jul 27, 2020 07:11 PM

சட்டீஷ்கர் மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chhattisgarh 5 yr old girl raped and killed by her cousin

சட்டீஷ்கரின் ஜஸ்புர் மாவட்டத்தில் ஐந்து சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், தனது வீட்டை விட்டு அருகே சென்றுள்ள நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப் போன சிறுமியின் குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

முன்னதாக, சிறுமியின் சகோதர முறையிலான மைனர் பையன் ஒருவன் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அவர்களின் கிராமத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளான். இந்நிலையில், சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் சிறுமியை அழைத்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.

சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன், அங்கு கிடந்த கல்லால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளான். பின், சிறுமியின் உடலை அங்குள்ள நீர் வீழ்ச்சி ஒன்றில் போட்டுக் கொண்டு திரும்பியுள்ளான்.

தொடர்ந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chhattisgarh 5 yr old girl raped and killed by her cousin | India News.