மருத்துவமனையில் உயிரிழந்த 'தாய்'.. மகள் மொபைலில் கடைசியாக 'கூகுள்' செய்த விஷயம்.. உறைந்து போன போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 26, 2022 11:25 AM

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் கீழூர் என்னும் பகுதயை சேர்ந்தவர் சந்திரன் (வயது 65). இவரது மனைவி ருக்மணி (57). இந்த தம்பதியருக்கு இந்துலேகா என்ற மகள் உள்ளார்.

Kerala woman decision after parents refuse to share property

Also Read | "என்னோட கிரிக்கெட் வாழ்க்கை'லயே".. தோனி குறித்து கோலி போட்ட 'Emotional' பதிவு.. மனம் உருகிய கிரிக்கெட் ரசிகர்கள்

இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

சிறு வயதில் இருந்தே ஆடம்பரமாக வாழ்வதில் அதிகம் நாட்டம் கொண்டு இந்துலேகா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தன்னிடம் இருந்த நகைகள் உள்ளிட்டவற்றை விற்றும் அவர் செலவு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், 8 லட்ச ரூபாய் வரை அவர் நகையை அடமானம் வைத்த கடனும் இருந்துள்ளது. இது பற்றி எதுவும் தெரியாத தனது கணவர், வெளிநாட்டில் இருந்து வந்தால் என்னவாகும் என்றும் இந்துலேகா பயந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Kerala woman decision after parents refuse to share property

திருச்சூர் பகுதியில் தனது தந்தைக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் இருப்பது, இந்துலேகாவின் நினைவுக்கு வரவே, அதனை விற்பது பற்றி பெற்றோர்களிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சந்திரன் மற்றும் ருக்மணி ஆகியோர் மறுப்பு தெரிவிக்கவே, இதன் காரணமாக தகராறு உருவானதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, திடீரென ருக்மணியின் உடல்நிலை மோசமானதால், அவரை சந்திரன் மற்றும் மகள் இந்துலேகா மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து போனார் ருக்மணி. மேலும், அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kerala woman decision after parents refuse to share property

இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இந்துலேகாவின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சந்திரனும் தனது மகள் மீது இருக்கும் சந்தேகத்தையும் போலீசாரிடம் கூறி உள்ளார்.

இதன் பின்னர், இந்துலேகாவின் செல்போனை பரிசோதித்த போது, போலீசார் அதிர்ந்து போயினர். அதில், விஷம் தொடர்பாக கூகுளில் அவர் தேடியுள்ளது பிரவுசிங் ஹிஸ்டரி மூலம் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், இந்துலேகாவிடம் விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தனது கடனை தீர்ப்பதற்காக சொத்துக்களை பெற்றோர்கள் எழுதி தராத காரணத்தினால், அவர்கள் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் இந்துலேகா. அதன்படி, ருக்மணி மற்றும் சந்திரன் ஆகியோருக்கு கொடுத்த டீயில் விஷம் கலந்து இந்துலேகா கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Kerala woman decision after parents refuse to share property

விஷம் கலந்த டீயை ருக்மணி குடித்த நிலையில், செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்த சந்திரன், அதனை குடிக்க முயன்ற சமயத்தில் மனைவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், டீயில் ஏதோ மோசமான வாசனை வரவே, அதனை குடிக்கவும் அவர் மறுத்துள்ளார். அப்படி மயங்கி விழுந்த மருத்துவமனை கொண்டு சென்ற போது, உயிரிழந்த நிலையில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் நடந்த விசாரணையில், தனது பெற்றோரை விஷம் கொடுத்து கொல்ல முயன்றதையும் இந்துலேகா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சொத்து பிரச்சனைக்காக தனது பெற்றோரையே மகள் கொல்ல துணிந்த சம்பவம், கேரள மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | இவ்வளவு நாளா இப்படி ஒன்னத்தான் தேடிட்டு இருந்தாங்க.. பக்கத்துலயே இருந்திருக்கே .. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!

Tags : #KERALA #KERALA WOMAN #PARENTS #REFUSE #PROPERTY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala woman decision after parents refuse to share property | India News.