'கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' 'பஸ்ல ஏறினப்போ புடவ சிக்கி...' 'நர்ஸ்க்கு நடந்த விபத்து...' 'அதுக்கப்புறம் தெரிய வந்த உள்ளத்தை நொறுக்கும் சோகம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Sep 02, 2020 05:31 PM

கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் பஸ்ஸைப் பிடிக்க முயன்றபோது புடவை சிக்கிக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kerala kannur pregnant nurse died saree tangled in bus

கேரள மாநிலம் கண்ணூர் பேராவூரில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையின் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் திவ்யா (26). இவர் எப்போதும் போல் இன்று காலை 7 மணியளவில் மருத்துவமனைக்கு செல்ல தயாராகியுள்ளார்.

அப்போது அவர் செல்லும் பேருந்து வருகையில், கை காட்டி நிறுத்தி பேருந்தில் ஏறும்போது, திவ்யாவின் புடவை மாட்டி பேருந்தின் கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் திவ்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் செவிலியர் திவ்யாவை காப்பாற்ற முடியவில்லை. மேலும் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கண்ணூர் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala kannur pregnant nurse died saree tangled in bus | India News.