Kadaisi Vivasayi Others

எனக்கு என் கள்ளக்காதல் முக்கியம்.. அதுக்காக எத்தனை உயிர் போனாலும் பரவா இல்ல.. வெறியோடு பெண் நடத்திய பயங்கரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Feb 09, 2022 06:03 PM

கர்நாடகா : ஒரே வீட்டில், 4 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், கொலையாளி யார் என்ற அதிர்ச்சி தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

karnataka illegal affair leads man to lose his family

வேற மாறி.. வேற மாறி.. பாண்ட்யா கேப்டனாக இருக்கும் அகமதாபாத் அணியின் புது பெயர் ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவிப்பு..!

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபாட்டனாவை அடுத்த கே.ஆர்.எஸ் பகுதியில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (வயது 30). இந்த தம்பதியருக்கு, ராஜ், கோமல் மற்றும் குணால் ஆகிய மூன்று குழந்தைகளும் இருந்தனர்.

கங்காராம் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வரும் இவர், சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன், கங்காராம் வியாபாரத்திற்கு வேண்டி வெளியூர் சென்றுள்ளார்.

5 பேர் கொலை

அப்போது வீட்டில், லட்சுமி மற்றும் அவரது குழந்தைகள் மூன்று பேருடன், கங்காராமின் சகோதரர் மகன் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், 4 குழந்தைகளுடன் சேர்த்து லட்சுமியும் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர். இந்த தகவல், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

karnataka illegal affair leads man to lose his family

தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லட்சுமி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஏதோ ஆயுதங்களைக் கொண்டு, கடுமையாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, கொலையாளி யார் என்பதைத் தேட ஆரம்பித்தனர்.

அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து, கொலையாளி யார் என்பது பற்றியும், கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றியும், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. லட்சுமியின் அக்காள் முறையில் வரும் உறவுக்கார பெண்ணான மற்றொரு லட்சுமியை (வயது 32), போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தால் தான், குழந்தைகள் உள்ளிட்டோரை லட்சுமி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

கள்ளக்காதல்

லட்சுமி மற்றும் கங்காராம் ஆகியோர் திருமணம் செய்த பிறகு, கொலையாளி லட்சுமிக்கு கங்காராமுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம், சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், கங்காராம் மனைவியான லட்சுமிக்கு, கணவரின் போக்கு பற்றி தெரிய வந்துள்ளது.

karnataka illegal affair leads man to lose his family

மறுத்த கங்காராம்

இதனால், இருவரையும் அவர் கண்டித்துள்ளார். மனைவி கண்டித்ததால், கொலையாளி லட்சுமியிடம் இருந்து கங்காராம் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மனைவியை விட்டு விட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படியும், கங்காராமிடம் லட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கும் கங்காராம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பயங்கர திட்டம்

தன்னிடம் இருந்து கங்காராம் விலகுவதை உணர்ந்த லட்சுமி, கோபம் அடைந்துள்ளார். மேலும், தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் லட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை தீர்த்துக் கட்டினால், கங்காராம் தன்னுடன் மீண்டும் நெருக்கம் ஆவார் என எண்ணி, அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற பயங்கர திட்டத்தை லட்சுமி போட்டுள்ளார்.

நாடகமாடிய லட்சுமி

அதன்படி, கங்காராம் இல்லாத நேரத்தில், வீட்டிற்கு சென்ற கொலையாளி லட்சுமி, குடும்பத்தினருடன் இரவு உணவு அருந்தியுள்ளார். பின்னர், அனைவரும் தூங்கும் நேரத்தில், லட்சுமி மற்றும் 4 குழந்தைகள் ஆகியோரை, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு, தூக்கத்திலேயே கொலை செய்துள்ளார். பிறகு, அதிகாலை நேரத்தில் மைசூரில் உள்ள தனது  வீட்டிற்கும் லட்சுமி சென்று ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

போலீசார் நடவடிக்கை

பின்னர், காலை 10 மணியளவில் கொலை நடந்த வீட்டிற்கு வந்த லட்சுமி, ஒன்றும் தெரியாதது போல, குழந்தைகளின் உடலை பார்த்து, கண்ணீர் விட்டு கதறி அழுதும் நாடகமாடியுள்ளார். தொடர்ந்து, கொலை நடந்த இரண்டு நாளுக்கு பிறகு, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில், போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

பயங்கர ஆயுதம்

அது மட்டுமில்லாமல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அனைவரையும் கொலை செய்ய வேண்டி லட்சுமி திட்டம் போட்டுள்ளார். அதே போல, கொலை செய்வதற்கான ஆயுதத்தையும் வாங்கி, கங்காராமின் வீட்டிலேயே மறைத்து வைக்கவும் செய்துள்ளார். பின்பு, கொலை செய்த ராத்திரியில், ஆயுதத்தை எடுத்து, குழந்தைகள் மற்றும் லட்சுமி ஆகியோரை, கொலையாளி லட்சுமி செய்தது, போலீசார் விசாரணையில் உறுதி ஆனது.

கள்ளக்காதல் விவகாரத்தில், தனது மனைவி மாற்றம் குழந்தைகள் அனைவரையும் கங்காராம் இழந்து நிற்கும் சம்பவம், வேதனையையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு செம டிமாண்ட்.. இந்த தடவை ரொம்ப பணத்தை ரெடியா வச்சிக்கோங்க.. சிஎஸ்கேவை அலெர்ட் பண்ணிய அஸ்வின்..!

Tags : #KARNATAKA #ILLEGAL AFFAIR #MAN #FAMILY #கள்ளக்காதல் #பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka illegal affair leads man to lose his family | India News.