‘எப்போ கொறையும்? எப்போ முடியும்?!’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 29, 2020 11:14 PM

இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் என்பவர் சிறுவயதிலேயே ஜோதிடம், வானியல் சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் ஜோதிட அறிவு அறிவுக்காக பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

indian astrology youth guessed about corona virus ending

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் ஒரு வீடியோ வெளியிட்டதாகவும் அதில் ஆகஸ்ட் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை அழுத்திக் கூறியதாகவும் மிகவும் அரிதாக செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில் ஒரே நேர் கோட்டில் வந்ததால் இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இவையெல்லாம் இணைவதால் அதிகமான கதிர்வீச்சு பூமியை தாக்கும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்துள்ளார்.

அதேநேரம் சந்திரனும் ராகுவும் இணைவது சக்தி வாய்ந்ததாகவும், உலகில் நோய்களை பரப்பும் என்றும் ஆனந்த் அதில் கணித்து கூறியுள்ளார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் வைரஸ்க்கும் இடையிலான போராக இருக்கும் சூழலில், இந்நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த நோய் தாக்குதல் எப்போது குறையும் என்று மக்கள் தவித்து வருவதை காண முடிகிறது. இந்நிலையில் கொரோனா வைரசின் வேகம் எப்போது குறையும் என்று அபிக்யா ஆனந்த் கணித்து கூறியுள்ளார். அதன்படி ஏப்ரல் 1 வரை கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் ஏப்ரலுக்கு பின் படிப்படியாக குறைந்து மே 29-ல் வைரஸ் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ள அபிக்யா ஆனந்த், பொருளாதார வீழ்ச்சியும் நவம்பரில் முடிவுக்கு வரும் என்று கணித்து கூறியுள்ளார்.

தவிர இந்த நோய் பரவாமல் இருக்க தண்ணீருடன் மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, அந்த ஆவி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி தலைமீது துண்டை வைத்து அந்த ஆவியை நுகர வேண்டும் என்றும் அது மூக்கு துவாரத்தின் வழியே சென்று கிருமிகளை அழிக்க வல்லது என்றும் அதன்பின்னர் புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் கூறியுள்ள அபிஜ்யா ஆனந்த் சூரிய ஒளியில் வெகு நேரம் இருக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.