www.garudabazaar.com

மயில்சாமி இறந்த அன்று என்ன நடந்தது ..? உடைக்கும் அவரது மகன் யுவன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமியின் இளைய மகன் யுவன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Mayilsamy Son Yuvan Mayilsamy about His father Demise

Images are subject to © copyright to their respective owners

நடிகர் மயில்சாமி சில நாட்களுக்கு முன்   அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை மாரடைப்பால் மயில்சாமி  உயிரிழந்தார்.  பின்னர் அஞ்சலிக்கு பிறகு நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Mayilsamy Son Yuvan Mayilsamy about His father Demise

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.

இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்று தணியும்', சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை யுவன் அளித்துள்ளார். அந்த பேட்டியில் மயில்சாமி மரணம் அடைந்த அன்று நடந்த சம்பவங்கள் குறித்து யுவன் பேசியுள்ளார். "காலையில் படப்பிடிப்பு முடிந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தார். பின்னர் வேறொரு படத்துக்கு டப்பிங் பணிகளை மேற்கொள்ள ஸ்டூடியோ சென்றார். பின்னர் மாலை டிரம்ஸ் சிவமணி உடன் சேர்ந்து மேகநாதீஸ்வர் கோயிலுக்கு சென்று சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை கோயிலில் இருந்து விட்டு வீடு திரும்பினார்.

Mayilsamy Son Yuvan Mayilsamy about His father Demise

இரவு தூங்காமல் இருந்ததால் ஒரே ஒரு இட்லி சாப்பிட்டார். பின்னர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். காரில் தெரு முக்கை தாண்டும் போது மரணம் அடைந்தார். சூர்யா மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர் ஏற்கனவே மரணம் அடைந்ததாக கூறினர். எனக்கு ராமசந்திரா போகனும் என்று தோன்றியது. அங்கும் அவர் மரணம் அடைந்ததை உறுதி செய்தனர். பின்னர் 5 மணியில் அவர் மரணம் உறுதி ஆனது. 5 அவருடைய லக்கி நம்பர்." என யுவன் மயில்சாமி உருக்கமாக கூறினார்.

மயில்சாமி இறந்த அன்று என்ன நடந்தது ..? உடைக்கும் அவரது மகன் யுவன்.. வீடியோ

Tags : Mayilsamy

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy Son Yuvan Mayilsamy about His father Demise

People looking for online information on Mayilsamy will find this news story useful.