www.garudabazaar.com
iTechUS

பிக்பாஸ்-ல இருந்து வெளியேறும்போது கதிர் சொன்ன வார்த்தை.. கலங்கிப்போன போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kathir Talks about his decision of leaving BiggBoss House

Also Read | எம்ஜிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அவர் டயலாக்கையே பேசி மிரள வெச்ச சத்யராஜ்!!.. வைரல் வீடியோ!!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Kathir Talks about his decision of leaving BiggBoss House

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.

Kathir Talks about his decision of leaving BiggBoss House

ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என கதிரிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர். இருப்பினும் பணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் கதிர் கூறியிருந்தார். அதன் பிறகு அசீம், மைனா ஆகியோருடன் கதிர் பேசுகிறார். அப்போது அஸீமிடம் அவர்,"நிறைய Fun லாம் வரும். பார்த்துட்டு வா" என்கிறார். அதன்பின்னர் மைனாவிடம்,"இதுதான் வெற்றி. போகும்போது அனுப்ப மக்களுக்கு மனசு இல்ல. வெளியே அனுப்பவும் மக்களுக்கு ஏத்துக்க மனசு இல்ல. அப்போ புரியவச்சிட வேண்டியதுதான். ஸ்போர்ட்டிவ்நெஸ், பெரிய விஷயத்தை விட்டுக்கொடுத்துறது. இதை வாழ்க்கையில சில நேரம் மிஸ் பண்ணிடுறோம்" என்றபடி சிரிக்கிறார். இதனை கவலைபடிந்த முகத்துடன் போட்டியாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Also Read | "நண்பகல் நேரத்து மயக்கம்.. தமிழ் படமா? மலையாள படமா?".. செம்ம ஜாலியாக பேசிய மம்மூட்டி!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kathir Talks about his decision of leaving BiggBoss House

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Biggboss House, Karthir, Karthiravan will find this news story useful.