www.garudabazaar.com
iTechUS

"விக்ரமன் -க்காக அசிம் முட்டை குடுத்தது உண்மை தான்".. சண்டை முடிஞ்ச பிறகு ராம் சொன்ன சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Ram explained about egg issue to vikraman and maheshwari

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா, ரச்சிதா, ஆயிஷா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து DD, பிரியங்கா, மாகாபா உள்ளிட்டோரும் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர்.

இதற்கு மத்தியில் விக்ரமன் முட்டை கேட்டதன் பெயரில் பெரிய சண்டை ஒன்று வெடித்தது. விக்ரமன் மணிகண்டாவிடம் இருக்கும் முட்டை பற்றி ராம் வழியாக கேட்டதாக தெரியும் நிலையில், தன் கைக்கு கடைசியில் முட்டை வந்து சேரவில்லை என்றும் விக்ரமன் கூறுவதாக தெரிகிறது. இதற்கிடையில், மகேஸ்வரியும் பேச வர, அவருக்கும் மணிக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி இருந்தது.

Ram explained about egg issue to vikraman and maheshwari

அப்போது மகேஸ்வரரி எவிக்ஷன் குறித்து மணி பேசியதாக தெரிகிறது. இதனால் இன்னும் ஆவேசமும் வேதனையும் மகேஸ்வரி அடைய தொடர்ந்து முட்டை பெயரில் பெரிய களேபரமே பிக் பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது. தொடர்ந்து, மெண்டல் மாதிரி பேசாதீங்க என மகேஷ்வரி சொல்ல, "அதை வாபஸ் வாங்குங்க" என்கிறார் விக்ரமன்.

இதற்கடுத்து மணிக்கு ஆதரவாக பேச வரும் அசிம், விக்ரமனிடம் நியாயம் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, பெரிய பிரச்சனையும் அங்கே உருவாகி இருந்தது. ஒரு முட்டை பெயரில் பெரிய கலவரமே உருவான நிலையில், அப்போது விக்ரமனுக்கு முட்டை கொடுத்ததாக மணிகண்டா கூறி இருந்ததாக தெரிகிறது. இதனால், முட்டை எங்கே போனது என அனைவரும் குழம்பிய நிலையில், பின்னர் ராம் சொன்ன விஷயம் தான் தற்போது பல போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

Ram explained about egg issue to vikraman and maheshwari

அமுதவாணன், விக்ரமன், மகேஸ்வரி உள்ளிட்டோர் இருக்க அப்போது பேசும் ராம், "விக்ரமனுக்காக மணிகிட்ட முட்டை கேட்டேன். அவன் சொன்ன எடத்துல எடுக்க போனேன், ஆனா அங்க முட்டை இல்ல. அது சைடுல இருந்ததுனால நான் கவனிக்கல போல. அடுத்து அசிம்கிட்ட வந்து 3 முட்டை கேட்டேன். அவரு குடுத்தாரு. அத எடுத்துட்டு வந்து குடுத்தேன். நான் அதுல Fried Rice சாப்பிட்டு போய்ட்டேன். இது தான் என்னோட பங்கு" என கூறியதும், விக்ரமனுக்கான முட்டை எங்கே என மகேஸ்வரி கேள்வி கேட்கிறார்.

அந்த முட்டையை அவர் மேஜையில் வைத்ததாகவும் ராம் கூற, அது எங்கே போனது என்பதும் சரிவர தெரியவில்லை. இதற்கடுத்து பேசும் மகேஸ்வரி, "அடப்பாவி, ஏன்ங்க, இது தெரியாம இவ்ளோ நேரம் சண்டை போட்டுட்டேனேங்க" என்றும் தெரிவிக்கிறார்.

Ram explained about egg issue to vikraman and maheshwari

விக்ரமுக்கு முட்டை கேட்டது பற்றி பெரிய பூகம்பமே வெடித்திருந்த நிலையில், தற்போது ராம் சொன்ன விஷயத்தால் சற்று முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஆனால் அதே வேளையில், ராம் ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தொடர்புடைய இணைப்புகள்

Ram explained about egg issue to vikraman and maheshwari

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Ram, Vikraman will find this news story useful.