www.garudabazaar.com
iTechUS

வெளியேறும் போது ஆயிஷாவிடம் Sorry கேட்ட கதிரவன்.. கைகுலுக்க மறுத்த ஷிவின்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kathir asks sorry to Ayesha for leaving BiggBoss House

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.

ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என கதிரிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர். இருப்பினும் பணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் கதிர் கூறியிருந்தார். இதனையடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் கதிர் தெரிவிக்கிறார். அப்போது ஆயிஷாவிடம் சாரி கேட்ட கதிரவன் அவர் வந்ததிலிருந்து ஒருநாள் கூட பிக்பாஸ் வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார். தொடர்ந்து பேசும் கதிர் வெளியே வந்தவுடன் சந்திக்கும்படியும் ஆயிஷாவிடம் கூறுகிறார்.

பின்னர் அருகில் இருந்த ஷிவினிடம் பேசும் கதிர் அவரிடம் போட்டிக்காக வாழ்த்து சொல்கிறார். அப்போது, கதிர் கைகொடுக்க, ஷிவின் கைகொடுக்க மறுத்துவிடுகிறார். பதிலுக்கு கைகூப்பி கதிருக்கு ஷிவின் வணக்கம் சொல்ல, கதிர் புன்னகைத்தபடியே அங்கிருந்து செல்கின்றார். இதனை சக போட்டியாளர்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kathir asks sorry to Ayesha for leaving BiggBoss House

People looking for online information on Biggboss6Tamil, Kathiravan, Shivin will find this news story useful.