இதனால் தான் வெளியேறினேன்... காரணத்தை உடைக்கும் பிக்பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏன் டிவிட்டரில் இருந்து வெளியேறினேன் என விளக்கியுள்ளார்.

Biggboss Abhirami opens why she quit twitter account

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்குமார் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் தமிழகமெங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், 'நான் ட்விட்டரில் இருக்கிறேன் என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் நான் அதில்  இல்லை, ட்விட்டரில் இருக்கும் சில முட்டாள்களால் தேவையற்ற பிரச்சனைகள் எனக்கு வந்தன. அதனால் நான் ட்விட்டரை விட்டு வெளியேறிவிட்டேன், மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூக தளத்திலும் நான் இல்லை. இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே நான் உங்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அதனால் என் பெயரில் இயங்கி வரும் எந்த அக்கவுன்ட்டையும் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor