www.garudabazaar.com

"ஒரே நேரத்துல 16 தோல்வி படங்களைலாம் கொடுத்தேன்..!" - விமர்சனங்கள் குறித்து அக்‌ஷய் குமார்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அக்ஷய்குமார். தமிழில் எந்திரன் 2-ஆம் பாகம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அக்ஷய் குமார் சமீபத்தில் பாலிவுட்டில் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்திவிராஜ், பெல்பாட்டம், ரக்ஷா பந்தன், கட்புட்லி உள்ள திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Akshay Kumar opens up on movies failure amid critics

Also Read | “அட.. இந்த வெர்ஷன் நல்லாருக்கே”.. 60 வருசம் கழிச்சு அதிரடியாய் லோகோவை மாற்றிய பிரபல செல்போன் நிறுவனம்..!

அண்மையில் அக்ஷய்குமார் நடிப்பில் செல்ஃபி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருவதை தொடர்ந்து இது தொடர்பாக அக்ஷய் குமார் மனம் திறந்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசும்பொழுது, “இப்படி நடப்பது எனக்கு முதல் முறை அல்ல. என்னுடைய கரியரில் 16  தோல்வி படங்களை ஒரே நேரத்தில் கொடுத்திருக்கிறேன். படங்கள் வெற்றி  பெறாததற்கும் நான்தான் காரணம். பார்வையாளர்களை நிச்சயமாக காரணமாக சொல்ல விரும்பவில்லை.

பார்வையாளர்கள் வழக்கமான படங்களை தாண்டி வேறொன்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் நானும் மாற வேண்டிய அவசியம் உள்ளது. தொடர்ந்து என் படங்கள் வெற்றி பெறவில்லை என்றால் அது என்னுடைய தவறு, எனக்கான எச்சரிக்கை மணி. அவற்றை சரி செய்து கொள்வதற்கே நான் முயற்சி செய்கிறேன். எனவே படம் நன்றாக போகவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர் அல்ல, ஒருவேளை நான் சரியான படங்களை தேர்ந்தெடுக்காதது கூட காரணமாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Also Read | சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்த இளம் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

தொடர்புடைய இணைப்புகள்

Akshay Kumar opens up on movies failure amid critics

People looking for online information on Akshay Kumar, Selfie will find this news story useful.