'உடனடியா எல்லாத்தையும் நிறுத்துங்க!'.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!.. உச்சக்கட்ட பரபரப்பில் உலக நாடுகள்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | May 26, 2020 10:56 AM

கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

who asks all countries to stop using hcq temporarily

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.

ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.

அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு இட்டுச்செல்வதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

தற்போது இரண்டு மருந்துகளும் தீவிரமான பக்க விளைவுகளை உருவாக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது,

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுக்கு சாத்தியமான சிகிச்சையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை "தற்காலிகமாக" நிறுத்தியதாக உலக சுகாதார நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு மருந்தைப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு  தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Who asks all countries to stop using hcq temporarily | World News.