'ஜெயில்ல நடந்த விஷயங்களை சொன்னா...' வெளிய யாரும் தலை காட்ட முடியாது...' 'பாத்ரூம்ல கேமரா வேற இருந்துச்சு...' - மரியம் ஷெரிப் குற்றசாட்டு...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Nov 13, 2020 06:49 PM

பனாமா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரிப்புக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை  விதிக்கப்பட்டது. மேலும் அவரது மகள் மரியம் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகளும்  அவரது மருமகன் சப்தர்க்கு ஒராண்டும் சிறை தண்டனை வழங்கப்ப்பட்டது. 

Mariam Sheriff camera was attached bathroom in jail

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நவாஸ் ஷெரிப் கடந்த ஆண்டு ஜாமின்  பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார். இதேபோல், அவன்பீல்ட் ஊழல் மற்றும் சர்க்கரை ஆலை ஊழல் ஆகிய வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள மரியம் ஷெரிப் தற்போது கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது  சிறை அனுபவங்கள் குறித்து பேசிய மரியம் ஷெரிப், நான் இரண்டு முறை  சிறைக்குச் சென்றிருக்கிறேன், நான் ஒரு பெண்ணாக சிறையில் எப்படி  நடத்தப்பட்டேன் என்பது பற்றிப் பேசினால், அவர்களின் முகங்களை வெளியே காட்டும் தைரியம் இருக்காது.

மேலும், அவர்கள் தான் தங்கியிருந்த சிறையிலும் குளியலறையிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி இருந்தார்கள். இவ்வாறு குற்றம்  சாட்டியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mariam Sheriff camera was attached bathroom in jail | World News.